வணக்கம் டியர்ஸ்,
இன்னும் சில நாட்கள்தான் பாக்கி லீவ் முடிய! இன்னிக்கு டே 12.
ட்ரேன்ல ஏறிட்டோம்னு போன பதிவில சொன்னேன். அடுத்த நாள் விடிகாலை சுமார் 3க்கு திருநெல்வேலி ஸ்டேஷன் இறங்கனோம் நாங்க ரெண்டு பேரும். தங்கம் ஏற்கனவே சொல்லி இருந்தாங்க, ஸ்டேஷன் வெய்ட்டிங் ரூம்ல போய் முதல்ல பார்க்கலாம்! அங்க பிடிக்கலனா ஒரு ஹோட்டல்ல போய் ரிஃப்ரேஷ் ஆகிக்கலாம்னு! நான் பழைய வாழ்க்கைய நினைச்சுப் பார்த்தேன்! வளர்ந்து வரும் பருவத்துலலாம் எஸ்டேட்ல பொது டாய்லட் யூஸ் பண்ணி வந்தவங்க நாங்க! படிப்படியா முன்னேறி இப்போ அபார்ட்மெண்ட்ல இருக்கறதுனால பழச மறந்துடக் கூடாதுல்ல! மனசுல இதெல்லாம்தான் ஓடுது வேய்ட்டிங் ரூம் போகறப்போ. கட்டணம் எவ்ளோன்னு மறந்திடுச்சு. சுத்தமாத்தான் இருந்தது.
அந்த விடிகாலைல நிறைய பேர்தான் உக்காந்தபடியே தூங்கிட்டு இருந்தாங்க அங்க. முதல்ல நான் போய் சிலு சிலு தண்ணில குளிச்சு கிளம்பி வந்துட்டேன். ரமணிசந்திரனோட தேவி கதைல, கதாநாயகியும் அவ தங்கையும் இப்படித்தான் வெய்ட்டிங் ரூம்ல சேலை மாத்திப்பாங்க! அத இமேஜீன் பண்ணவே முடியல அப்போ! இப்போ, ஓ நம்மள மாதிரித்தான் மாத்திருப்பாங்கன்னு தோணுச்சு. பதிவர் தன்னை ரமணிசந்திரன் நாயகியாக உணர்ந்த தருணம் அது.
View attachment 272
இதான் அந்த வெய்ட்டிங் ரூம்!! தூக்கக் கலக்கம் இன்னும் கண்ணுல நிக்கிது!!
View attachment 273
ஸ்டேஷன் வெளிய இது!
ட்ரைவர் சுமார் நாலுக்கு வந்தாரு! காலைலயே அவர கஷ்டப்படுத்த வேணாம்னுதான் நாலு மணிக்கு சொன்னாங்க தங்கமலர். அவர் வந்ததும் ஸ்ட்ரேய்ட்டா நெல்லையப்பர் கோயில் தெருவுக்கு போயாச்சு. அஞ்சு மணிக்கு மேலத்தானே காலைல கோயில் திறப்பாங்க! சோ கார்லயே கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணோம்!
சரி வா கோயில் வாசல்ல வேய்ட் பண்ணலாம்னு கூப்டாங்க தங்கம். கண்ணு சொறுகுது! இப்படியே உக்காந்தா சரி வராதுன்னு போய்ட்டோம்! அங்க அஞ்சாறு பேரு எங்களுக்கு முன்னாடியே உக்காந்திருக்காங்க! எவ்ளோ பக்தி பாருங்களேன்! வேய்ட் பண்ணற நேரத்துக்கு வெளி வாசல் சுவரில இருந்த சிற்பங்கள பார்க்க ஆரம்பிச்சேன்! ஆத்தி!!! பாதிக்கும் மேல பலான போஸ்ல இருக்கு! அங்க ஆம்பளைங்கலாம் சுத்தி இருந்தாங்க! இல்லைன்னா நான் நல்லா உத்துப் பார்த்து ஆராய்ச்சி பண்ணிருப்பேன்!!!!!
எங்கள கடந்து போன ஓர் அம்மா, என்னைப் பார்த்து பின்னாடி வா, பின்னாடி வான்னு கூப்பிட்டாங்க! இவங்க எதுக்குடா நம்மள கூப்பிடறாங்கன்னு பயந்துட்டு போகல நானு!(ஆக்சுவலி பின்னாடித்தான் காந்திமதி அம்மனோட வாசல் இருக்கு! காலைல அங்கத்தான் பூஜை ஸ்டார்ட் ஆகுது). நானும் சுத்தி கவனிச்சிட்டே இருந்தேன். காய்கறிலாம்வந்து இறங்குச்சு! உள்ள சமைப்பாங்களோன்னு யோசனை ஓடுது எனக்கு. அதையெல்லாம் அப்பவே கொஞ்சம் பெருசா வெட்ட ஆரம்பிச்சிட்டாங்க.
பிறகு கோயில் வாசல் திறந்துட்டாங்க! எல்லாரும் குடுகுடுன்னு ஓடறாங்க! நாங்களும் பின்னாடி போறோம்! பாதி வழில கோசாலை இருக்கு கோயில் உள்ளயே! ஒருத்தர் எங்க ரெண்டு பேரையும் வாங்கம்மான்னு கூப்ட்டாரு! என்னென்னு போய் கேட்டோம்! கையில் காய்கறிகள குடுத்து மாடுகளுக்குப் போட சொன்னாரு! அட அப்படின்னு, போய் அதை செஞ்சோம்! செம்ம ஹேப்பி நாங்க!
View attachment 274
கோயில் உள்ள இந்த ஒரு படம் மட்டும்தான் எடுத்தோம்! ரூல்ஸ மதிக்கனும்ல!!!!
அதன் பிறகு எல்லோரும் வேகமா போன இடத்துக்கு நாங்களும் போனோம்! அது காந்திமதி அம்மன் சந்நிதி! கொஞ்ச நேரத்துல அவ்ளோ கூட்டம் சேர்ந்திடுச்சு! உங்காருங்க, உக்காருங்கன்னு சிலர் எங்க கிட்ட சொன்னாங்க! நாங்களும் என்ன ஏதுனே தெரியாம உக்காந்துட்டோம். இடம் விடுங்க, சில நிமிஷம்தான் காட்டுவாங்க! அப்படின்னு சவுண்டு வேற என் பின்னாடி இருந்து! என்னத்தடா எல்லாரும் இவ்ளோ ஆர்வமா பார்க்கப் போறாங்கன்னு நானும் எக்ஸைட்டட்! இடிக்கறாங்க வேற கீழ உக்காந்திருக்க என்னை! ஒருத்தர், ஏம்மா நீங்க தினமும் பார்க்கறதுதானே! வெளியூர்க்காரங்களுக்கு இடம் கொடுங்கம்மா! பார்க்கட்டும்னு எங்களுக்கு சப்போர்ட்! எப்படி நாங்க வெளியூர்னு தெரிஞ்சிருக்கும்???
அப்புறம் திரை திறந்தது! எல்லாரும் பாட்டுப் பாட ஆரம்பிச்சிட்டாங்க! உற்சவர் காந்திமதி அம்மனுக்கு ஊஞ்சல் ஆட்டி திருப்பள்ளி எழுச்சி செய்யறாங்கன்னு அப்போத்தான் தெரியுது எனக்கு! இதெல்லாம் நான் பார்த்ததே இல்லை! அவ்ளோ லைவ்லியான மோமண்ட்! கண்ணு கலங்கிடுச்சு! பிறகு உற்சவர் அம்மன வெளிய வச்சாங்க! எல்லாரும் அவங்கள ஒரு சுத்து வந்தாங்க! நாங்களும் வந்தோம்! பிறகு அவங்கள தூக்கிக்கிட்டு பாட்டு பாடிட்டே நடக்க ஆரம்பிச்சாங்க! நாங்களும் பின்னாடியே போனோம்!
காந்திமதி அம்மன கொண்டு வந்துதான் நெல்லையப்பர எழுப்பறாங்க! அது ஒரு சடங்கா நடக்குது! அவ்ளோ ஆனந்தம் எனக்கு! நெல்லையப்பரையும் அழகா தரிசிச்சாச்சு! சந்நிதானத்த விட்டு வெளிய வந்து தூண்ல தட்டுனா மியூசிக் வருமே, அது எங்கன்னு தேடனோம்! திருநெல்வேலி மக்கள் ரொம்ப ரொம்ப நல்லவங்க! வெளி ஆளுங்கன்னு அவ்ளோ விட்டுக் குடுத்தாங்க! அவ்ளோ விளக்கம் சொன்னாங்க! நல்லா கைட் பண்ணாங்க! ஒருத்தர் அந்த தூண காட்டிக் குடுத்தாரு. சில்லறை காசு வச்சுத் தட்டிக் காட்டனாரு!
இன்னொருத்தர் வந்து கஜபூஜைக்குப் போங்க, போங்கன்னு சொல்லவும், அது என்ன பூஜைன்னு தெரியலையேன்னு மறுபடி கூட்டம் பின்னாடி போ! அங்க நம்ம கோயில் யானை கம்பீரமா நிக்கறாரு! அவருக்கு செய்யற பூஜைதான் கஜபூஜையாம்! அதையும் கண் குளிர பார்த்தோம்! கடைசியா கோமாதா பூஜை நடந்தது. அது முடிஞ்சதும் சூடா பால் மற்றும் புளி சாதமும் குடுத்தாங்க! செம்ம டேஸ்ட்டி! நின்னபடியே சாப்பிட்டுட்டு, மறுபடி மியூசிக் தூண் கிட்ட வந்தோம். நாங்க சில்லறைல தட்டறத பார்த்துட்டு பூசாரி ஒருத்தர் அப்படி செய்யாதீங்க, காயம் படும்னு சொல்லி அவரே தட்டிக் காட்டுனாரு! பியானோவும், ஓர்கனும் சேர்ந்து வாசிச்ச மாதிரி ஒரு சவுண்டு!!வாரே வா!!!!!
அத முடிச்சுட்டு கோயில சும்மா சுத்தி வந்தோம்! அப்போத்தான் தாமிர சபை பத்தி ஒருத்தர் சொன்னாரு! அதையும் போய் பார்த்துட்டு வந்தோம். ஒரு ஏழு, ஏழரை மணி போல கோயில விட்டு திருப்தியா வெளிய வந்தோம்!
View attachment 275
View attachment 276
View attachment 277
கோயில் இருக்கற தெருவுல இந்தப் பெரிய தேர் இருக்கு! அவ்ளோ அழகு தெரியுமா!!!
View attachment 278
View attachment 279
காலை நேரத்து திருநெல்வேலி.
View attachment 280
சரி, கடைகள்லாம் இன்னும் திறக்கலியேன்னு குறுக்குத்துறை முருகன் கோயிலுக்குப் போயாச்சு! அந்தக் கோயில் வெள்ளம் வந்தப்போ ரொம்ப பாதிச்சிருச்சாம். இப்போ திருப்பணிகள் போய்கிட்டு இருக்கு.
View attachment 281
கோயில சுத்தி இருக்கற இந்த ஆற்றங்கரைய மக்கள் குளிக்க துவைக்கன்னு உபயோகிக்கறாங்க! நாங்க முருகன கும்பிட்டுட்டு, தண்ணில கால நனைச்சிட்டு, கொஞ்ச நேரம் வேடிக்கைப் பார்த்துட்டு கிளம்பிட்டோம்!
இன்னும் சில நாட்கள்தான் பாக்கி லீவ் முடிய! இன்னிக்கு டே 12.
ட்ரேன்ல ஏறிட்டோம்னு போன பதிவில சொன்னேன். அடுத்த நாள் விடிகாலை சுமார் 3க்கு திருநெல்வேலி ஸ்டேஷன் இறங்கனோம் நாங்க ரெண்டு பேரும். தங்கம் ஏற்கனவே சொல்லி இருந்தாங்க, ஸ்டேஷன் வெய்ட்டிங் ரூம்ல போய் முதல்ல பார்க்கலாம்! அங்க பிடிக்கலனா ஒரு ஹோட்டல்ல போய் ரிஃப்ரேஷ் ஆகிக்கலாம்னு! நான் பழைய வாழ்க்கைய நினைச்சுப் பார்த்தேன்! வளர்ந்து வரும் பருவத்துலலாம் எஸ்டேட்ல பொது டாய்லட் யூஸ் பண்ணி வந்தவங்க நாங்க! படிப்படியா முன்னேறி இப்போ அபார்ட்மெண்ட்ல இருக்கறதுனால பழச மறந்துடக் கூடாதுல்ல! மனசுல இதெல்லாம்தான் ஓடுது வேய்ட்டிங் ரூம் போகறப்போ. கட்டணம் எவ்ளோன்னு மறந்திடுச்சு. சுத்தமாத்தான் இருந்தது.
அந்த விடிகாலைல நிறைய பேர்தான் உக்காந்தபடியே தூங்கிட்டு இருந்தாங்க அங்க. முதல்ல நான் போய் சிலு சிலு தண்ணில குளிச்சு கிளம்பி வந்துட்டேன். ரமணிசந்திரனோட தேவி கதைல, கதாநாயகியும் அவ தங்கையும் இப்படித்தான் வெய்ட்டிங் ரூம்ல சேலை மாத்திப்பாங்க! அத இமேஜீன் பண்ணவே முடியல அப்போ! இப்போ, ஓ நம்மள மாதிரித்தான் மாத்திருப்பாங்கன்னு தோணுச்சு. பதிவர் தன்னை ரமணிசந்திரன் நாயகியாக உணர்ந்த தருணம் அது.
View attachment 272
இதான் அந்த வெய்ட்டிங் ரூம்!! தூக்கக் கலக்கம் இன்னும் கண்ணுல நிக்கிது!!
View attachment 273
ஸ்டேஷன் வெளிய இது!
ட்ரைவர் சுமார் நாலுக்கு வந்தாரு! காலைலயே அவர கஷ்டப்படுத்த வேணாம்னுதான் நாலு மணிக்கு சொன்னாங்க தங்கமலர். அவர் வந்ததும் ஸ்ட்ரேய்ட்டா நெல்லையப்பர் கோயில் தெருவுக்கு போயாச்சு. அஞ்சு மணிக்கு மேலத்தானே காலைல கோயில் திறப்பாங்க! சோ கார்லயே கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணோம்!
சரி வா கோயில் வாசல்ல வேய்ட் பண்ணலாம்னு கூப்டாங்க தங்கம். கண்ணு சொறுகுது! இப்படியே உக்காந்தா சரி வராதுன்னு போய்ட்டோம்! அங்க அஞ்சாறு பேரு எங்களுக்கு முன்னாடியே உக்காந்திருக்காங்க! எவ்ளோ பக்தி பாருங்களேன்! வேய்ட் பண்ணற நேரத்துக்கு வெளி வாசல் சுவரில இருந்த சிற்பங்கள பார்க்க ஆரம்பிச்சேன்! ஆத்தி!!! பாதிக்கும் மேல பலான போஸ்ல இருக்கு! அங்க ஆம்பளைங்கலாம் சுத்தி இருந்தாங்க! இல்லைன்னா நான் நல்லா உத்துப் பார்த்து ஆராய்ச்சி பண்ணிருப்பேன்!!!!!
எங்கள கடந்து போன ஓர் அம்மா, என்னைப் பார்த்து பின்னாடி வா, பின்னாடி வான்னு கூப்பிட்டாங்க! இவங்க எதுக்குடா நம்மள கூப்பிடறாங்கன்னு பயந்துட்டு போகல நானு!(ஆக்சுவலி பின்னாடித்தான் காந்திமதி அம்மனோட வாசல் இருக்கு! காலைல அங்கத்தான் பூஜை ஸ்டார்ட் ஆகுது). நானும் சுத்தி கவனிச்சிட்டே இருந்தேன். காய்கறிலாம்வந்து இறங்குச்சு! உள்ள சமைப்பாங்களோன்னு யோசனை ஓடுது எனக்கு. அதையெல்லாம் அப்பவே கொஞ்சம் பெருசா வெட்ட ஆரம்பிச்சிட்டாங்க.
பிறகு கோயில் வாசல் திறந்துட்டாங்க! எல்லாரும் குடுகுடுன்னு ஓடறாங்க! நாங்களும் பின்னாடி போறோம்! பாதி வழில கோசாலை இருக்கு கோயில் உள்ளயே! ஒருத்தர் எங்க ரெண்டு பேரையும் வாங்கம்மான்னு கூப்ட்டாரு! என்னென்னு போய் கேட்டோம்! கையில் காய்கறிகள குடுத்து மாடுகளுக்குப் போட சொன்னாரு! அட அப்படின்னு, போய் அதை செஞ்சோம்! செம்ம ஹேப்பி நாங்க!
View attachment 274
கோயில் உள்ள இந்த ஒரு படம் மட்டும்தான் எடுத்தோம்! ரூல்ஸ மதிக்கனும்ல!!!!
அதன் பிறகு எல்லோரும் வேகமா போன இடத்துக்கு நாங்களும் போனோம்! அது காந்திமதி அம்மன் சந்நிதி! கொஞ்ச நேரத்துல அவ்ளோ கூட்டம் சேர்ந்திடுச்சு! உங்காருங்க, உக்காருங்கன்னு சிலர் எங்க கிட்ட சொன்னாங்க! நாங்களும் என்ன ஏதுனே தெரியாம உக்காந்துட்டோம். இடம் விடுங்க, சில நிமிஷம்தான் காட்டுவாங்க! அப்படின்னு சவுண்டு வேற என் பின்னாடி இருந்து! என்னத்தடா எல்லாரும் இவ்ளோ ஆர்வமா பார்க்கப் போறாங்கன்னு நானும் எக்ஸைட்டட்! இடிக்கறாங்க வேற கீழ உக்காந்திருக்க என்னை! ஒருத்தர், ஏம்மா நீங்க தினமும் பார்க்கறதுதானே! வெளியூர்க்காரங்களுக்கு இடம் கொடுங்கம்மா! பார்க்கட்டும்னு எங்களுக்கு சப்போர்ட்! எப்படி நாங்க வெளியூர்னு தெரிஞ்சிருக்கும்???
அப்புறம் திரை திறந்தது! எல்லாரும் பாட்டுப் பாட ஆரம்பிச்சிட்டாங்க! உற்சவர் காந்திமதி அம்மனுக்கு ஊஞ்சல் ஆட்டி திருப்பள்ளி எழுச்சி செய்யறாங்கன்னு அப்போத்தான் தெரியுது எனக்கு! இதெல்லாம் நான் பார்த்ததே இல்லை! அவ்ளோ லைவ்லியான மோமண்ட்! கண்ணு கலங்கிடுச்சு! பிறகு உற்சவர் அம்மன வெளிய வச்சாங்க! எல்லாரும் அவங்கள ஒரு சுத்து வந்தாங்க! நாங்களும் வந்தோம்! பிறகு அவங்கள தூக்கிக்கிட்டு பாட்டு பாடிட்டே நடக்க ஆரம்பிச்சாங்க! நாங்களும் பின்னாடியே போனோம்!
காந்திமதி அம்மன கொண்டு வந்துதான் நெல்லையப்பர எழுப்பறாங்க! அது ஒரு சடங்கா நடக்குது! அவ்ளோ ஆனந்தம் எனக்கு! நெல்லையப்பரையும் அழகா தரிசிச்சாச்சு! சந்நிதானத்த விட்டு வெளிய வந்து தூண்ல தட்டுனா மியூசிக் வருமே, அது எங்கன்னு தேடனோம்! திருநெல்வேலி மக்கள் ரொம்ப ரொம்ப நல்லவங்க! வெளி ஆளுங்கன்னு அவ்ளோ விட்டுக் குடுத்தாங்க! அவ்ளோ விளக்கம் சொன்னாங்க! நல்லா கைட் பண்ணாங்க! ஒருத்தர் அந்த தூண காட்டிக் குடுத்தாரு. சில்லறை காசு வச்சுத் தட்டிக் காட்டனாரு!
இன்னொருத்தர் வந்து கஜபூஜைக்குப் போங்க, போங்கன்னு சொல்லவும், அது என்ன பூஜைன்னு தெரியலையேன்னு மறுபடி கூட்டம் பின்னாடி போ! அங்க நம்ம கோயில் யானை கம்பீரமா நிக்கறாரு! அவருக்கு செய்யற பூஜைதான் கஜபூஜையாம்! அதையும் கண் குளிர பார்த்தோம்! கடைசியா கோமாதா பூஜை நடந்தது. அது முடிஞ்சதும் சூடா பால் மற்றும் புளி சாதமும் குடுத்தாங்க! செம்ம டேஸ்ட்டி! நின்னபடியே சாப்பிட்டுட்டு, மறுபடி மியூசிக் தூண் கிட்ட வந்தோம். நாங்க சில்லறைல தட்டறத பார்த்துட்டு பூசாரி ஒருத்தர் அப்படி செய்யாதீங்க, காயம் படும்னு சொல்லி அவரே தட்டிக் காட்டுனாரு! பியானோவும், ஓர்கனும் சேர்ந்து வாசிச்ச மாதிரி ஒரு சவுண்டு!!வாரே வா!!!!!
அத முடிச்சுட்டு கோயில சும்மா சுத்தி வந்தோம்! அப்போத்தான் தாமிர சபை பத்தி ஒருத்தர் சொன்னாரு! அதையும் போய் பார்த்துட்டு வந்தோம். ஒரு ஏழு, ஏழரை மணி போல கோயில விட்டு திருப்தியா வெளிய வந்தோம்!
View attachment 275
View attachment 276
View attachment 277
கோயில் இருக்கற தெருவுல இந்தப் பெரிய தேர் இருக்கு! அவ்ளோ அழகு தெரியுமா!!!
View attachment 278
View attachment 279
காலை நேரத்து திருநெல்வேலி.
View attachment 280
சரி, கடைகள்லாம் இன்னும் திறக்கலியேன்னு குறுக்குத்துறை முருகன் கோயிலுக்குப் போயாச்சு! அந்தக் கோயில் வெள்ளம் வந்தப்போ ரொம்ப பாதிச்சிருச்சாம். இப்போ திருப்பணிகள் போய்கிட்டு இருக்கு.
View attachment 281
கோயில சுத்தி இருக்கற இந்த ஆற்றங்கரைய மக்கள் குளிக்க துவைக்கன்னு உபயோகிக்கறாங்க! நாங்க முருகன கும்பிட்டுட்டு, தண்ணில கால நனைச்சிட்டு, கொஞ்ச நேரம் வேடிக்கைப் பார்த்துட்டு கிளம்பிட்டோம்!
Author: VanishaAdmin
Article Title: Day 12--(23/7/2024)
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: Day 12--(23/7/2024)
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.