Day 11--(22/7/2024)

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
583
-2,661
93
வணக்கம் டியர்ஸ்,

லீவுக்கு வந்து பதினொரு நாள் ஆகிடுச்சு! எவ்ளோ வேகமா காலம் ஓடுது!!!

பொள்ளாச்சிக்கு பாய் சொல்லிட்டு கிளம்பியாச்சு!

View attachment 250
இந்த இடம் பாத்தீங்கல்ல, இது கோயம்புத்தூர்ல இருக்கு! ஒரு தடவை பேஸ்புக் ஸ்க்ரோல் பண்ணறப்போ கண்ணுல பட்டிச்சு! அப்போ தங்கமலர் கிட்ட சொன்னேன்! இங்க ஒரு போட்டோ புடிக்கனும்னு! ஆனா அதை மறந்துட்டோம்! பொள்ளாச்சில இருந்து கிளம்பி கோயம்புத்தூர் ரீச் பண்றப்போ ஏதேச்சையா நான் இத பார்த்துட்டேன். நிறுத்துங்க!!!!! அப்படின்னு சொல்லி, இறங்கி போட்டோ புடிச்சிட்டோம்!..

View attachment 251

பிறகு ஸ்ட்ரேய்ட்டா ஈஷாக்கு வண்டிய விட்டாச்சு! அதான் ஏற்கனவே போயாச்சே. மறுபடி ஏன்னு கேக்கறீங்களா? அண்ணிக்கு ஆதி சிவனோட குட்டி சிலை, அதுவும் அங்க வாங்கனதுதான் வேணும்னு சொல்லி விட்டிருந்தாங்க! அதுக்காகவும் தியான லிங்கம்லாம் பார்க்கலியே அதுக்காகவும் போயிருந்தோம்!

பெரிய பேக், போன்லாம் உள்ள எடுத்துப் போக முடியாது! லாக்கர் குடுக்கறாங்க, அங்க வச்சிட்டுப் போகலாம்! நிறைப வோலண்டியர் அங்க வேலைப் பார்க்கறதனால சீக்கிரமா வச்சிட்டும் போய்டலாம். நாங்க போனப்போ, நெறைய நார்த் இந்திய மக்கள், கூட்டம் கூட்டமா வந்திருந்தாங்க!

View attachment 252
உள்ள போகிற முன்னாடி எடுத்த போட்டோ!

ரொம்பப் பெரிய இடம்! நடக்கலாம் நடக்கலாம் நடந்துட்டே இருக்கலாம். கலவையான மக்கள்! கலவையான மொழிகள்! லிங்க பைரவி பார்த்துட்டு, கொஞ்ச நேரம் அங்கயே கண் மூடி உக்காந்தோம்! குங்குமம் வச்சிக்கிட்டு, அடுத்து தீர்த்தகுண்ட் போனோம். ஆண்களுக்குத் தனியாகவும் பெண்களுக்குத் தனியாகவும் இருக்கு இந்த இடம். உள்ள போகனும்னா டிக்கட் எடுக்கனும். முழுசா முழுகி எழனும்னு நெனைக்கறவங்களுக்கு மொத்தமா நைட்டி மாதிரி ஒரு துணி குடுக்கறாங்க! நாங்க முழுதா முழுகல! சோ கை கால மட்டும் கழுவிட்டு உள்ள போனோம். பல படி இறங்கி கீழ போகனும்! அங்கத்தான் லிங்கம் நடுவுல இருக்க, சுத்தி தண்ணி இருக்கு! அதுல இறங்கி பலர் நீராடி, லிங்கத்த சுத்திட்டு மேல ஏறி வராங்க! நான் படில இறங்கறப்ப, ஒரு லேடி மேல ஏறினாங்க. என்னைப் பார்த்துட்டு, சும்மா அப்படியே பார்த்துட்டு போகாம காலயும் கையையுமாச்சும் நனைச்சிட்டு போங்க! அப்படின்னு சொல்லிட்டுப் போனாங்க! அவங்க யார் எவருன்னே எனக்குத் தெரியாது! சரி சொல்லிட்டாங்களேன்னு, கால நனைச்சி, துணி மறைக்காத பாகமெல்லாம் தண்ணி எடுத்து பூசிட்டு, முகத்த கழுவிக்கிட்டேன்! எப்படி சொல்லன்னு தெரில! அந்தத் தண்ணில ஒரு வைப்ரேஷன் இருக்கு.

அதன் பிறகு தியான லிங்கத்துக்குப் போனோம்! செட் பை செட்டாத்தான் விடறாங்க! வாட்டர் பாட்டில்லாம் உள்ள அலவுட் இல்ல! ஒரு செட் மக்கள் வந்ததும் அடுத்த செட் நாங்க போனோம்! பெரிய லிங்கம் நடுவுல! அதை சுத்தி உக்காந்தோம் எல்லோரும்! பத்து நிமிஷம் கண்ண மூடி தியானம்! என்னால பத்து நிமிஷம்லாம் முடியல! நாலு நிமிஷத்துலயே கண்ண திறந்துட்டேன். அதன் பிறகு லிங்கத்தையும் சுத்தி தியானம் செஞ்ச மக்களயும் பார்த்துட்டு உக்காந்திருந்தேன். அந்த பத்து நிமிஷமும் உள்ளத்தான் இருக்கனும்! எழுந்து போகக் கூடாது! மத்தவங்களுக்கு டிஸ்டர்பன்ஸா இருக்கும்ல! சோ விட மாட்டறாங்க!

அங்க முடிச்சுட்டு அவங்களோட காண்டின்ல உக்காந்து ஒரு கருப்பட்டி காபி அண்ட் பணியாரம் சாப்பிட்டோம்! அண்ணி கேட்டத வாங்கிட்டு அங்கிருந்து கிளம்பியாச்சு!
 

Author: VanishaAdmin
Article Title: Day 11--(22/7/2024)
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
583
-2,661
93
நெக்ஸ்ட் மருதமலைதான் லிஸ்டல! நாங்க ஈஷாலயே கொஞ்சம் லேட்டாக்கிட்டோம்! அப்புறம்தான் தோணுச்சு மருதமலை பகல்ல நடை சாத்திடுவாங்களேன்னு!

நான் வளந்ததே முருகன் பாடல்கள கேட்டுத்தான். காலைல அஞ்சு மணிக்கு எழுந்ததுமே எங்கப்பா முருகன் பாடல்கள போட்டு விட்டிருவாரு! தூங்கிட்டே கேட்டுட்டு இருப்பேன் நான். மருதமலை மாமணியே முருகைய்யா, மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க பாட்டுலாம் எத்தனை நூறு தடவை கேட்டிருப்பேன்னே தெரியாது! மலர்ட்ட சொல்லிருக்கேன் பல தடவை, மருதமலை முருகன பார்க்கனும்னு! கூகுள் பண்ணி பார்த்தப்ப, நம்ம காவ்யாகிட்ட கேட்டப்ப மணி ஒன்னுக்கு நடை சாத்திடுவாங்கன்னு தெரிஞ்சது! ரெண்டு பேருமே அப்செட்! மேல மலைக்கே ஏற விட மாட்டாங்க ஒரு மணியாகிட்டான்னு வேற சொல்றாங்க! எனக்கா, முருகன பார்க்காட்டியும் பரவால்ல, மேலே போய் அந்தக் கோபுரத்த பார்த்தாச்சும் கையெடுத்து கும்பிட்டுறனும்னு இருந்துச்சு.

ஒரு மணிக்குத்தான் கீழ் அடிவாரத்துக்கு நுழையறோம்! கார ஒன்னுமே கேக்காம விட்டுட்டாங்க! அப்பாடின்னு இருந்துச்சு எனக்கு! மேல போனதும், அங்க மாங்காய் விக்கற பொண்ணுக்கிட்ட தங்கம் விசாரிச்சாங்க! ஆமாக்கா ஒரு மணிக்கு சாத்திடுவாங்க! இப்போ கும்புட முடியாதுன்னு சொல்லிட்டா! அடுத்து எப்ப திறப்பாங்கன்னு தங்கம் கேக்க, ரெண்டு மணிக்கு திறந்திடுவாங்கன்னு சொல்லி வயித்துல பால வார்த்துட்டா அந்தப் பொண்ணு! எல்லா கோயிலும் மாலைலத்தானே திறப்பாங்கன்னு போய்டாம, நல்ல வேள இத கேட்டாங்க தங்கமலர். எங்களுக்கு இன்னும் டைமிருக்கவும், ஒரு சந்தோஷ பெருமூச்சு!

அந்தப் பொண்ணுக்கிட்ட மாங்கா வாங்கி சாப்பிட்டுட்டு, கோயில் படி ஏறனோம். அங்க மடப்பள்ளி அருகே பிரசாதம் விக்கற கடை இருக்கு! அதுதான் நமக்கு லன்ச்சுன்னு சர்க்கரைப் பொங்கல், புளி சாதம், வடை வாங்கிட்டு உக்காந்தோம் ஓர் ஓரமா.

View attachment 253

அப்போ பூசாரி ஒருத்தர் வாங்கம்மான்னு என்னைக் கூப்பிட்டாரு! கிட்ட போனா கைல அவரும் புளி சாதம் குடுத்தாரு! மடப்பள்ளில செஞ்சது! அதையும் சாப்பிட்டோம். மறுபடியும் கூப்பிட்டு கல்கண்டு சாதம் குடுத்தாரு! அதையும் சாப்பிட்டோம்! இன்னிக்கு முருகன் எங்கள லேட்டா வரவச்சு, நல்லா சாப்பாடு குடுத்து வயித்தயும் நெறைச்சி விட்டுட்டான்!

View attachment 254

View attachment 255

சிறப்பு தரிசன கியூல போய் வரிசைப் புடிச்சு நின்னோம்! கரேக்டா ரெண்டு மணி சில நிமிடங்களில நடை திறந்துட்டாங்க! உள்ள போனா எங்கப்பன் முருகன் சிரிக்கறான்! என்ன ஓர் அழகு, என்ன ஒரு தேஜஸ்!!அப்பாப்பா! காண கண் கோடி வேண்டும்! என் முன்ன நின்ன லேடி, ரொம்ப நேரம் மனமுருகி முருகன வேண்டினாங்க! நானும் அவங்க பக்கத்துல நின்னு கண் குளிர முருகன பார்த்துட்டே இருந்தேன்! மனசு நெறைஞ்சுப் போச்சு!

View attachment 256
கோயில் திருப்பணி நடந்துட்டு இருக்கு.

View attachment 257

View attachment 258

தரிசனம் முடிச்சிட்டு கார்ல வந்து உக்காந்ததும் தங்கம் சொல்றாங்க நாம மட்டும் முருகன பார்த்துட்டா, இனி நீ மலேசியா கிளம்பற வரைக்கும் சைவமா இருக்கேன்னு வேண்டிருக்கேன்னு! நீயும் இருக்கனும்னு ஒரு குண்ட தூக்கிப் போட்டாங்க! யூ இரு மேன், வை மீன்னு நான் கேக்கல! ஏன்னா இது எனக்காக வேண்டிக்கிட்ட வேண்டுதல்! நானும் ஃப்ளைட்ல ஏறுற வரைக்கு சைவமாத்தான் இருந்தேன்!

அடுத்து ஃபேன்ஸ் மீட் கொடிசியா புத்தகத் திருவிழால. நாலு மணிக்கு சந்திப்போம்னு சொல்லிருந்தேன்! இவ்ளோ பிரச்சனை, இவ்ளோ ட்ராபிக்! கரேக்டா போய் சேர்ந்திடுவோமானு பயம் வேற! கொஞ்சம் லேட்டானாலும் புக் ஃபேர்கு போய்ட்டோம்! எனக்கு உள்ளுக்குள்ள வெடவெடன்னு வருது! சட்டுன்னு யார் கிட்டயும் பேசிட வராது எனக்கு! நல்லா பழகனதும் வாய் ஓயாது! அது வேற டிபார்ட்மேண்ட்! சட்டுன்னு என்னைப் பார்க்கறவங்க, இது ஒரு நெனைப்பு பிடிச்ச புள்ளன்னு சொல்லிடுவாங்க!!! அவ்வ்வ்வ்!!!!

View attachment 259
தங்கமலர், ரைட்டர் சுகன்யா பாலாஜீ, நானு, சித்ரா சரஸ்வதிம்மா, அவங்க டாட்டர்! ரொம்ப சந்தோஷம் உங்கள எல்லாம் சந்திச்சதுல :)

View attachment 260
நன்றி கவி ரெஹபியன் சிஸ்!!! ரைட்டர் மேகலா வரதுக்கு இருந்தாங்க! செம்ம மழைலயும், ட்ராபிக்லயும் மாட்டிக்கிட்டாங்க! சோ அவங்கள சந்திக்க முடியல!! சாரி மேகி!!!

View attachment 261

View attachment 262
நிறைய புக் ஸ்டால் இருந்தது! ஆனா நம்மளோட குடும்ப நாவல்கள் இல்ல! ரொம்ப டிசப்பாயிண்ட்டட்டா ஆகிட்டது! ஏன்??? குடும்ப நாவல்கள்ல நாம நல்லது சொல்லலியா? நாம பேசாத, எடுக்காத, சொல்லாத, அலசாத விஷயங்களே இல்லை கதைகள்லன்னு சொல்லிடலாம்! என்னமோ நம்மள கண்டா மட்டும் இவங்களுக்கு தக்காளி தொக்காத்தான் இருக்கு!!!!!

அங்க ஒரு ரவுண்ட் முடிச்சிட்டு, இவங்க கூடலாம் பேசிட்டு ட்ரேய்ன்கு கிளம்பியாச்சு! ஸ்டேஷன் போறதுக்கு முன்ன ஒரு கடைல டீ குடிச்சிட்டு, நைட் சாப்பாட்டுக்கு சப்பாத்தி வாங்கியாச்சு! அங்க ஒரு கூத்து! ரெண்டு சப்பாத்தி கேட்டோம்! குருமா தனியா வாங்கனுமாம்! சரின்னு வாங்கனா, குருமா அவ்ளோ பெருசா வருது! அந்த குருமாவுக்காக மறுபடி ரெண்டு சப்பாத்தி வாங்கு!!!!!!! என்னங்கடா அநியாயம் பண்றீங்க மோமெண்ட்!!!!
 

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
583
-2,661
93
View attachment 263
அந்தக் கடைல உக்காந்து குடிச்ச டீ! பிறகு ஸ்டேஷன் போயாச்சு! நம்ம ரைட்டர் காவ்யாஜெயா வரேன்கா, வெயிட் பண்ணுங்கன்னு அத்தனை மேசேஜ்! வேலை முடிச்சு அடிச்சுப் புடிச்சு வந்தப் புள்ளய பேக் தூக்க விட்டாச்சு :)

ஸ்டேஷன்ல எங்க கூட உக்காந்து மேடம் செம்ம கதை!

View attachment 264
அவ போட்டோ போடல! சோ அவ வாங்கிக் குடுத்த இனிப்பு போட்டோ போடறேன்! இருட்டுது, நீ கிளம்புன்னு அவள அனுப்பி வச்சிட்டோம்!

கோயம்புத்தூர் நாகர்கோயில் ஸ்பேஷல் ட்ரேன்தான் நாங்க எடுக்க வேண்டிய ட்ரேன் எல்லா கோச்சும் இருக்கு! நாங்க ஏற வேண்டிய கோச்ச மட்டும் காணோம்! கடைசிய அத தனியா இழுத்துட்டு வந்து பூட்டுனாங்க! பிறகு ஏறியாச்சு! View attachment 265

View attachment 266
இதோ அந்த அதிசய சப்பாத்தி அண்ட் குருமா!!!! நல்லாத்தான் இருந்தது! சாப்பிட்டுட்டு கொஞ்ச நேரம் பேசிட்டிருந்தோம்! பிறகு மருந்து சாப்பிட்டுட்டு கவுந்தாச்சு!!

மறுநாள் இந்த ரைட்டர் ரமணிசந்திரன் கதாநாயகியா ஃபீல் பண்ண தருணம்லாம் வருது!! இணைந்திருங்கள்!

தொடரும்...