அவனுக்கு சற்று முன்னே ஸ்கூட்டியில் பறந்து கொண்டிருந்த வர்ணியின் மனத்திலோ உணர்வுகள் பொங்கிப் பிரவகித்துக் கொண்டிருக்கக் கண்ணை வேகமாய்த் துடைத்தபடியே கோவிலை நோக்கி ராக்கியை விரட்டிக் கொண்டிருந்தாள்.
மனம் முழுக்க உணர்வுகளின் வயப்பட்டிருந்தது. கஷ்டப்பட்டு படித்து முடித்து வெளியே வந்து ஒரு தொழில் ஆரம்பித்து மத்திய தர வாழ்க்கையை ஒவ்வொரு செங்கல்லாய் கட்டி முடித்ததற்கெல்லாம் இறுதி வரை அர்த்தமே இல்லையா? கடைசியில் அநாதை என்ற சொல்லில் தான் அவர்களின் அடையாளம் நின்று கொள்ளுமா?
பிரதீப்பின் வீட்டுக்கு பூஜாவை பிடிக்கவில்லை என்றதும் மனம் லேசாய் வலித்தது தான். அதை தாங்கள் பின்னணியோ செல்வாக்கோ பணமோ இல்லாதவர்கள் என்ற அர்த்தத்தில் தான் மறுக்கிறார்கள் என்பதளவில் தான் வர்ணியின் மனது எண்ணியிருந்தது. ஆனால் இன்றைக்கு கடைக்கு வந்த அந்த மனிதரையும் அவரது உறவுகளையும் நேரில் பார்த்தபோது உலகத்தின் பாசாங்குகள் தங்களை தோலுரித்து கோரப்பற்களை வெளிக்காட்டியதைப் போல இருவருமே உறைந்து நின்று விட்டார்கள்.
ஏனெனில் அந்த மனிதருக்கும் அவர் உறவுகளுக்கும் அவர்கள் மேல் இருந்தது இருந்தது அப்பட்டமான வெறுப்பும் அசூசையுமே! அவர்கள் இருவரையும் மனிதர்களாய் கூட எண்ணிப் பார்க்கவில்லை. வீட்டுக்குள் தற்செயலாய் வந்து விட்ட சொறி கொண்ட தெருநாயை அடித்து விரட்டும் ஆக்ரோஷம் மட்டுமே அவர்களின் மனிதத்தனத்தையும் குணத்தையும் மறைத்து அங்கே வெளிப்பட்டிருந்தது. தங்களைக் குறித்த உருவகத்தை வலுக்கட்டாயமாய் தளவாடியில் பார்க்க வைக்கப்பட்ட அந்தக்கணம் அவளுக்கு இன்னுமே உடலை நடுங்க வைத்தது. பூஜாவின் கையை இறுகப் பற்றிச் கொண்டு அந்தக்கணத்தைக் கடக்க அவர்கள் தங்களுக்கு தைரியத்தை மானசீகமாய் பரிமாற முயன்றபடி உறைந்து நின்ற கணம் வர்ணிக்கு ஒன்று மட்டும் புரிந்து போனது.
இனிமேல் இந்த திருமணம் நடக்காது.
பூஜா நிச்சயம் சம்மதிக்கப் போவதில்லை.
பிரதீப் பயந்தாங்கொள்ளி தான் என்றாலும் அவனது காதலை என்றைக்குமே வர்ணி சந்தேகப்பட்டதில்லை. அவனது காதலும் நிஜம் பூஜாவும் காதலித்தது நிஜம்.. ஆனால் இவர்கள் மனதில் இருக்கும் தங்களின் பிம்பத்தைப் பார்த்த பிறகு சர்வ நிச்சயமாய் பூஜா இதற்கு ஒத்துக்கொள்ள மாட்டாள். பூஜாவின் முகத்தைப் பார்த்தபோதே புரிந்து போனது அவளுக்கு.
சரி இது போகட்டும்…இந்த காயம் அவளை இனிமேல் இன்னொரு வாழ்க்கை குறித்து யோசிக்க அனுமதிக்குமா? வர்ணியே யோசிப்பாளே.. ஒவ்வொரு வீட்டிலும் போய் வாழ்க்கை பிச்சை வாங்கித்தான் வாழ வேண்டும் என்றால் அப்படியொரு வாழ்க்கையே அவளுக்கு தேவையில்லை என்று வர்ணியே முடிவெடுக்கும் போது பூஜா இலகுவில் இதை கடந்து சென்று விடுவாளா?
யார் யாரோ சுற்றி நின்றார்கள். பலர் தடுக்க பார்த்தார்கள். "பாவம் யாருமில்லா பெண்கள்" என்றார்கள், சிலர் தடுக்கவும் பிரயத்தனமில்லாமல் பரிதாபமாய் வேடிக்கை பார்த்தார்கள்.. முகங்கள் முகங்கள் எல்லாமே முகங்கள், கடலலை போல நெளிந்து வளைந்து பிம்பங்கள் ஓட அது யார் எவர் என்று பிரித்தறியும் ஆற்றலை அவளது மூளை எப்போதோ நிறுத்திக் கொண்டு விட்டிருந்தது.
எல்லாம் முடிந்தது. தலைக்கு மேல் வெள்ளம் போனபிறகு சாண் போனால் என்ன முழம் போனால் என்ன என்று தான் வர்ணி வாய் திறந்தாள்.
ஆனால் கையை ஓங்கிக் கொண்டு அவர் வந்த போது நடுங்கிப் போனாள்.
செவிப்பறை கிழிந்து உதட்டோரம் ரத்தம் வழியப் போகிறது என்று ஒரு பிரமை உறைந்து நின்றவளின் மனதில் ஓட, பூஜா அவளை அனிச்சையாய் தனக்குப் பின்னே மறைத்துக் கொள்ள, லக்கி ஆன்ட்டியின் "டார்லிங்" என்ற அலறலும், முகங்களின் அலையை நீந்தி விலக்கி பரிதவித்து ஓடி வந்த அவரும் மட்டுமே அவள் கண்ணுக்கு தெரிய, "ஐயோ ஆன்ட்டி" என்று பூஜாவை உதறிக்கொண்டு ஓட அவளது உள்ளுணர்வு உந்திய அந்த கணம் தான் அவன் உள்ளே வந்தான்.
முதலில் அந்த மனிதரின் கையைப் பிடித்து தடுத்து விட்டு அம்மாவையும் பாதுகாத்துக் கொண்டவன் உள்ளே வந்து நிமிர்ந்து நிற்க, மிரட்டும் அவனது உடல்மொழிக்கு மேலதிகமாக கோபத்தில் சிவந்த விழிகள் எல்லாரையும் காலத்தை உறைய வைப்பதைப் போல நிற்கும் இடத்திலேயே உறைந்து நிற்க வைத்தது.
பளீர்! பிரதீப் கன்னத்தை அதிர்ந்து பற்றிக் கொண்ட அந்த கணம் தான் அவள் அவ்வளவு நேரமும் அமிழ்ந்து போய்க்கொண்டே இருந்த சதுப்பு நிலம் அவளை வெளியே துப்பி விட்டது போல அவளும் சுய உணர்வுக்கு வந்தாள் வர்ணி.
சாஹி செய்ததை சத்தியமாய் அவளுக்கே நம்ப முடியவில்லை.
அந்த மனிதரின் ஆக்ரோஷத்தை நிறுத்தி அம்மாவை பாதுகாத்துக் கொண்டு அங்கே யாரும் இருக்கக்கூடாது என்று மிரட்டி விட்டு போயிருந்திருக்கலாம். அவன் அப்படி செய்யவில்லை. பூஜாவுக்காய் செய்யாவிட்டாலும் நியாயத்துக்காய் அவன் பிரதீப்பை கேள்வி கேட்க, அவன் அடிவாங்கியதில் குமுறி அழுதபடி அருகே ஓடினாலும், பிரதீப்பின் பக்கம் செல்லாத பூஜாவைப் பார்த்ததுமே அவள் மனதில் நினைத்தது வர்ணிக்கு உறுதியாகி விட்டது.
இனிமேல் இவள் பிரதீப்பை சேரவும் மாட்டாள். அவனைக் கடந்து செல்லவும் மாட்டாள்.
ஆசை ஆசையாய் பதிவுத் திருமணமே ஆனாலும் எந்த குறையும் இருக்கக்கூடாது என்று பார்த்து பார்த்து ஒழுங்கு செய்து கொண்டிருந்தவளுக்கு இப்போது பெரும் சோகம் மனதைக் கவ்விற்று.. நேரே நின்று கொண்டிருந்த குமாரை அனிச்சையாய் பார்க்க ஆண்டாண்டுகளாய் அவர்கள் பேசிக்கொள்ளும் பரிபாஷை அப்போது அவனும் அதையே உணர்வதை சொல்லிற்று.. வர்ணியின் தோள்கள் தளர்ந்தன.
குமாரோ பிரதீப்பை சாஹி கேள்வி கேட்பதையே ஒருகணம் பார்த்திருந்தவன் விடுவிடுவென வெளியேறிப் போக வர்ணிக்கும் இயலாமையில் அழுகை தான் வந்தது. பிரதீப் ஒத்துக்கொள்வதோ அவனது தந்தையாரும் உறவினர்களும் செய்வதறியாமல் கத்துவதோ எதுவும் அவள் மனதைத் தாக்கவில்லை. தன்னுடைய நண்பியின் ரணப்பட்ட மனதையும் கண்கூடாய் தெரிந்த அவளது எதிர்காலத்தையும் மட்டுமே எண்ணிக்கொண்டு கையாலாகாதவளாய் அங்கே நின்று கொண்டிருந்தாள்.
மீண்டும் குமார் வந்தான். இப்போது அவன் கண்ணில் சிரிப்பு இருந்தது. வர்ணியை நோக்கிய ஒற்றைக் கண்சிமிட்டல். அவ்வளவே தான்.. வர்ணியின் தலைக்குள்ளும் மின்னல் வேகத்தில் சில்லுகள் சுழல அவளுக்கும் 'இதோ இதோ இது தான் சரியான தருணம். இதை மட்டும் விட்டோம் என்றால் இவளுடைய வாழ்க்கையில் இப்படியொரு தருணம் வராமலே போய்விடலாம்' என்று எண்ணம் தொற்றிக்கொள்ள பார்வை இப்போது பார்வதி ஆன்ட்டியிடம் படிந்திருந்தது.
இந்த டாஸ்க்குக்கு சரியானவர் இவர் தான்.. அவருக்கு பூஜாவுக்கு நல்லது நடக்கவேண்டும் அதை நாம் செய்யவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது என்று அவளுக்குத்தான் தெரியுமே..
சாஹியிடம் குமார் மாலையை நீட்டிய அந்த கணம் மோதி விழுவதைப் போல பார்வதி ஆன்ட்டி மேல் இவள் விழுந்து ஆன்ட்டியை சாஹிக்கு அருகில் தள்ளிவிட சாஹியோடு மோதப் பார்த்தவர் சுதாகரித்து நிமிர்ந்தபோது அவள் எதிர்பார்த்ததைப் போல மாலைகளையும் கண்டு விட்டார்.
"சரி சரி.. அது தான் அவனே ஒத்துக்கிட்டான். அதுக்கப்புறம் என்ன? பூஜா இங்கே வா இதை பிடி.. தம்பி நீ இதை பிடி" என்று இருவரின் கையிலும் அவர் மாலைகளை கொடுக்க பூஜா வாங்கவில்லை.
"அட வாங்கிக்க.." என்று மிரட்டி அவரே தான் அவளது கையைப் பிடித்து மாலையை வாங்க வைத்தார் வர்ணியும் அதற்குள் ஓடி வந்து நின்று விட, "எல்லாரும் மாத்திக்கோங்க மாத்திக்கோங்க" என்று சொல்ல ஆரம்பிக்க பூஜாவுக்கு அங்கே மறுக்க முடியவில்லை. வர்ணி எதிர்பார்த்ததைப் போலவே..விழிகளில் நீர் பொங்க அவளது மறுப்பு அப்பட்டமாய் தெரிந்தது.
அதை பிரதீப்பும் உணர்ந்து கொண்டிருக்க வேண்டும், அவசரமாய் அவளது கழுத்தில் மாலையைப் போட்டவனின் விழிகளால் அவளை இறைஞ்சலானான். யுகங்களாய் நீடித்த கணங்களின் பின் பூஜா ஒரு வழியாய் அவனது கழுத்தில் மாலையைப் போட்டு விட்டாள். தலைக்கு மேல் அழுத்திக் கொண்டிருந்த மலையே அகன்றது போல இருவரையும் அணைத்து வாழ்த்திவிட்டு வர்ணி விலகிக்கொள்ள அதன் பிறகு நடந்தது எதுவுமே அவளது கட்டுப்பாட்டில் இல்லை..
பொங்கிய சிரிப்போடு இதற்கெல்லாம் காரணமானவனை ஓரக்கண்ணால் இப்போது புதிதாய் முளைத்திருந்த வாஞ்சையோடு பார்த்தாள் அவள்.
அவனது அதிர்ந்த முகபாவத்தைப் பார்க்க அவளுக்கு கொஞ்சம் பாவமாய் இருந்தது தான் ஆனால் அவர்களுக்கும் வேறு வழியில்லையே.. அவன் அந்நியன் என்ற எண்ணமே இப்போது அவள் மனதில் சுத்தமாய் இல்லை. கொஞ்சமே கொஞ்சம் அவனை உபயோகித்துக் கொண்ட குற்றவுணர்வு.. ம்ஹ்ம்.. சுத்தமாய் இல்லை!
சிரித்துக் கொண்டே உடை மாற்றி மேக்கப் போட்டுக்கொள்ள ஓடி விட்டவள் அவன் எப்படியும் கோவிலுக்கு வரமாட்டான் என்று தான் குழந்தைகளை ஆள்கடத்தல் செய்து பெற்றோரை அழைப்பது போல, லக்கி ஆன்ட்டியைக் கடத்திக் கொண்டு அவனை அழைத்து வரும் பொறுப்பையும் குமாரிடம் கொடுத்து விட்டு பறந்து விட்டாள்.
மனம் முழுக்க உணர்வுகளின் வயப்பட்டிருந்தது. கஷ்டப்பட்டு படித்து முடித்து வெளியே வந்து ஒரு தொழில் ஆரம்பித்து மத்திய தர வாழ்க்கையை ஒவ்வொரு செங்கல்லாய் கட்டி முடித்ததற்கெல்லாம் இறுதி வரை அர்த்தமே இல்லையா? கடைசியில் அநாதை என்ற சொல்லில் தான் அவர்களின் அடையாளம் நின்று கொள்ளுமா?
பிரதீப்பின் வீட்டுக்கு பூஜாவை பிடிக்கவில்லை என்றதும் மனம் லேசாய் வலித்தது தான். அதை தாங்கள் பின்னணியோ செல்வாக்கோ பணமோ இல்லாதவர்கள் என்ற அர்த்தத்தில் தான் மறுக்கிறார்கள் என்பதளவில் தான் வர்ணியின் மனது எண்ணியிருந்தது. ஆனால் இன்றைக்கு கடைக்கு வந்த அந்த மனிதரையும் அவரது உறவுகளையும் நேரில் பார்த்தபோது உலகத்தின் பாசாங்குகள் தங்களை தோலுரித்து கோரப்பற்களை வெளிக்காட்டியதைப் போல இருவருமே உறைந்து நின்று விட்டார்கள்.
ஏனெனில் அந்த மனிதருக்கும் அவர் உறவுகளுக்கும் அவர்கள் மேல் இருந்தது இருந்தது அப்பட்டமான வெறுப்பும் அசூசையுமே! அவர்கள் இருவரையும் மனிதர்களாய் கூட எண்ணிப் பார்க்கவில்லை. வீட்டுக்குள் தற்செயலாய் வந்து விட்ட சொறி கொண்ட தெருநாயை அடித்து விரட்டும் ஆக்ரோஷம் மட்டுமே அவர்களின் மனிதத்தனத்தையும் குணத்தையும் மறைத்து அங்கே வெளிப்பட்டிருந்தது. தங்களைக் குறித்த உருவகத்தை வலுக்கட்டாயமாய் தளவாடியில் பார்க்க வைக்கப்பட்ட அந்தக்கணம் அவளுக்கு இன்னுமே உடலை நடுங்க வைத்தது. பூஜாவின் கையை இறுகப் பற்றிச் கொண்டு அந்தக்கணத்தைக் கடக்க அவர்கள் தங்களுக்கு தைரியத்தை மானசீகமாய் பரிமாற முயன்றபடி உறைந்து நின்ற கணம் வர்ணிக்கு ஒன்று மட்டும் புரிந்து போனது.
இனிமேல் இந்த திருமணம் நடக்காது.
பூஜா நிச்சயம் சம்மதிக்கப் போவதில்லை.
பிரதீப் பயந்தாங்கொள்ளி தான் என்றாலும் அவனது காதலை என்றைக்குமே வர்ணி சந்தேகப்பட்டதில்லை. அவனது காதலும் நிஜம் பூஜாவும் காதலித்தது நிஜம்.. ஆனால் இவர்கள் மனதில் இருக்கும் தங்களின் பிம்பத்தைப் பார்த்த பிறகு சர்வ நிச்சயமாய் பூஜா இதற்கு ஒத்துக்கொள்ள மாட்டாள். பூஜாவின் முகத்தைப் பார்த்தபோதே புரிந்து போனது அவளுக்கு.
சரி இது போகட்டும்…இந்த காயம் அவளை இனிமேல் இன்னொரு வாழ்க்கை குறித்து யோசிக்க அனுமதிக்குமா? வர்ணியே யோசிப்பாளே.. ஒவ்வொரு வீட்டிலும் போய் வாழ்க்கை பிச்சை வாங்கித்தான் வாழ வேண்டும் என்றால் அப்படியொரு வாழ்க்கையே அவளுக்கு தேவையில்லை என்று வர்ணியே முடிவெடுக்கும் போது பூஜா இலகுவில் இதை கடந்து சென்று விடுவாளா?
யார் யாரோ சுற்றி நின்றார்கள். பலர் தடுக்க பார்த்தார்கள். "பாவம் யாருமில்லா பெண்கள்" என்றார்கள், சிலர் தடுக்கவும் பிரயத்தனமில்லாமல் பரிதாபமாய் வேடிக்கை பார்த்தார்கள்.. முகங்கள் முகங்கள் எல்லாமே முகங்கள், கடலலை போல நெளிந்து வளைந்து பிம்பங்கள் ஓட அது யார் எவர் என்று பிரித்தறியும் ஆற்றலை அவளது மூளை எப்போதோ நிறுத்திக் கொண்டு விட்டிருந்தது.
எல்லாம் முடிந்தது. தலைக்கு மேல் வெள்ளம் போனபிறகு சாண் போனால் என்ன முழம் போனால் என்ன என்று தான் வர்ணி வாய் திறந்தாள்.
ஆனால் கையை ஓங்கிக் கொண்டு அவர் வந்த போது நடுங்கிப் போனாள்.
செவிப்பறை கிழிந்து உதட்டோரம் ரத்தம் வழியப் போகிறது என்று ஒரு பிரமை உறைந்து நின்றவளின் மனதில் ஓட, பூஜா அவளை அனிச்சையாய் தனக்குப் பின்னே மறைத்துக் கொள்ள, லக்கி ஆன்ட்டியின் "டார்லிங்" என்ற அலறலும், முகங்களின் அலையை நீந்தி விலக்கி பரிதவித்து ஓடி வந்த அவரும் மட்டுமே அவள் கண்ணுக்கு தெரிய, "ஐயோ ஆன்ட்டி" என்று பூஜாவை உதறிக்கொண்டு ஓட அவளது உள்ளுணர்வு உந்திய அந்த கணம் தான் அவன் உள்ளே வந்தான்.
முதலில் அந்த மனிதரின் கையைப் பிடித்து தடுத்து விட்டு அம்மாவையும் பாதுகாத்துக் கொண்டவன் உள்ளே வந்து நிமிர்ந்து நிற்க, மிரட்டும் அவனது உடல்மொழிக்கு மேலதிகமாக கோபத்தில் சிவந்த விழிகள் எல்லாரையும் காலத்தை உறைய வைப்பதைப் போல நிற்கும் இடத்திலேயே உறைந்து நிற்க வைத்தது.
பளீர்! பிரதீப் கன்னத்தை அதிர்ந்து பற்றிக் கொண்ட அந்த கணம் தான் அவள் அவ்வளவு நேரமும் அமிழ்ந்து போய்க்கொண்டே இருந்த சதுப்பு நிலம் அவளை வெளியே துப்பி விட்டது போல அவளும் சுய உணர்வுக்கு வந்தாள் வர்ணி.
சாஹி செய்ததை சத்தியமாய் அவளுக்கே நம்ப முடியவில்லை.
அந்த மனிதரின் ஆக்ரோஷத்தை நிறுத்தி அம்மாவை பாதுகாத்துக் கொண்டு அங்கே யாரும் இருக்கக்கூடாது என்று மிரட்டி விட்டு போயிருந்திருக்கலாம். அவன் அப்படி செய்யவில்லை. பூஜாவுக்காய் செய்யாவிட்டாலும் நியாயத்துக்காய் அவன் பிரதீப்பை கேள்வி கேட்க, அவன் அடிவாங்கியதில் குமுறி அழுதபடி அருகே ஓடினாலும், பிரதீப்பின் பக்கம் செல்லாத பூஜாவைப் பார்த்ததுமே அவள் மனதில் நினைத்தது வர்ணிக்கு உறுதியாகி விட்டது.
இனிமேல் இவள் பிரதீப்பை சேரவும் மாட்டாள். அவனைக் கடந்து செல்லவும் மாட்டாள்.
ஆசை ஆசையாய் பதிவுத் திருமணமே ஆனாலும் எந்த குறையும் இருக்கக்கூடாது என்று பார்த்து பார்த்து ஒழுங்கு செய்து கொண்டிருந்தவளுக்கு இப்போது பெரும் சோகம் மனதைக் கவ்விற்று.. நேரே நின்று கொண்டிருந்த குமாரை அனிச்சையாய் பார்க்க ஆண்டாண்டுகளாய் அவர்கள் பேசிக்கொள்ளும் பரிபாஷை அப்போது அவனும் அதையே உணர்வதை சொல்லிற்று.. வர்ணியின் தோள்கள் தளர்ந்தன.
குமாரோ பிரதீப்பை சாஹி கேள்வி கேட்பதையே ஒருகணம் பார்த்திருந்தவன் விடுவிடுவென வெளியேறிப் போக வர்ணிக்கும் இயலாமையில் அழுகை தான் வந்தது. பிரதீப் ஒத்துக்கொள்வதோ அவனது தந்தையாரும் உறவினர்களும் செய்வதறியாமல் கத்துவதோ எதுவும் அவள் மனதைத் தாக்கவில்லை. தன்னுடைய நண்பியின் ரணப்பட்ட மனதையும் கண்கூடாய் தெரிந்த அவளது எதிர்காலத்தையும் மட்டுமே எண்ணிக்கொண்டு கையாலாகாதவளாய் அங்கே நின்று கொண்டிருந்தாள்.
மீண்டும் குமார் வந்தான். இப்போது அவன் கண்ணில் சிரிப்பு இருந்தது. வர்ணியை நோக்கிய ஒற்றைக் கண்சிமிட்டல். அவ்வளவே தான்.. வர்ணியின் தலைக்குள்ளும் மின்னல் வேகத்தில் சில்லுகள் சுழல அவளுக்கும் 'இதோ இதோ இது தான் சரியான தருணம். இதை மட்டும் விட்டோம் என்றால் இவளுடைய வாழ்க்கையில் இப்படியொரு தருணம் வராமலே போய்விடலாம்' என்று எண்ணம் தொற்றிக்கொள்ள பார்வை இப்போது பார்வதி ஆன்ட்டியிடம் படிந்திருந்தது.
இந்த டாஸ்க்குக்கு சரியானவர் இவர் தான்.. அவருக்கு பூஜாவுக்கு நல்லது நடக்கவேண்டும் அதை நாம் செய்யவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது என்று அவளுக்குத்தான் தெரியுமே..
சாஹியிடம் குமார் மாலையை நீட்டிய அந்த கணம் மோதி விழுவதைப் போல பார்வதி ஆன்ட்டி மேல் இவள் விழுந்து ஆன்ட்டியை சாஹிக்கு அருகில் தள்ளிவிட சாஹியோடு மோதப் பார்த்தவர் சுதாகரித்து நிமிர்ந்தபோது அவள் எதிர்பார்த்ததைப் போல மாலைகளையும் கண்டு விட்டார்.
"சரி சரி.. அது தான் அவனே ஒத்துக்கிட்டான். அதுக்கப்புறம் என்ன? பூஜா இங்கே வா இதை பிடி.. தம்பி நீ இதை பிடி" என்று இருவரின் கையிலும் அவர் மாலைகளை கொடுக்க பூஜா வாங்கவில்லை.
"அட வாங்கிக்க.." என்று மிரட்டி அவரே தான் அவளது கையைப் பிடித்து மாலையை வாங்க வைத்தார் வர்ணியும் அதற்குள் ஓடி வந்து நின்று விட, "எல்லாரும் மாத்திக்கோங்க மாத்திக்கோங்க" என்று சொல்ல ஆரம்பிக்க பூஜாவுக்கு அங்கே மறுக்க முடியவில்லை. வர்ணி எதிர்பார்த்ததைப் போலவே..விழிகளில் நீர் பொங்க அவளது மறுப்பு அப்பட்டமாய் தெரிந்தது.
அதை பிரதீப்பும் உணர்ந்து கொண்டிருக்க வேண்டும், அவசரமாய் அவளது கழுத்தில் மாலையைப் போட்டவனின் விழிகளால் அவளை இறைஞ்சலானான். யுகங்களாய் நீடித்த கணங்களின் பின் பூஜா ஒரு வழியாய் அவனது கழுத்தில் மாலையைப் போட்டு விட்டாள். தலைக்கு மேல் அழுத்திக் கொண்டிருந்த மலையே அகன்றது போல இருவரையும் அணைத்து வாழ்த்திவிட்டு வர்ணி விலகிக்கொள்ள அதன் பிறகு நடந்தது எதுவுமே அவளது கட்டுப்பாட்டில் இல்லை..
பொங்கிய சிரிப்போடு இதற்கெல்லாம் காரணமானவனை ஓரக்கண்ணால் இப்போது புதிதாய் முளைத்திருந்த வாஞ்சையோடு பார்த்தாள் அவள்.
அவனது அதிர்ந்த முகபாவத்தைப் பார்க்க அவளுக்கு கொஞ்சம் பாவமாய் இருந்தது தான் ஆனால் அவர்களுக்கும் வேறு வழியில்லையே.. அவன் அந்நியன் என்ற எண்ணமே இப்போது அவள் மனதில் சுத்தமாய் இல்லை. கொஞ்சமே கொஞ்சம் அவனை உபயோகித்துக் கொண்ட குற்றவுணர்வு.. ம்ஹ்ம்.. சுத்தமாய் இல்லை!
சிரித்துக் கொண்டே உடை மாற்றி மேக்கப் போட்டுக்கொள்ள ஓடி விட்டவள் அவன் எப்படியும் கோவிலுக்கு வரமாட்டான் என்று தான் குழந்தைகளை ஆள்கடத்தல் செய்து பெற்றோரை அழைப்பது போல, லக்கி ஆன்ட்டியைக் கடத்திக் கொண்டு அவனை அழைத்து வரும் பொறுப்பையும் குமாரிடம் கொடுத்து விட்டு பறந்து விட்டாள்.
Author: Ush
Article Title: லக்கி வீடு - 6
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: லக்கி வீடு - 6
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.