அவசர அவசரமாய் குளித்து வழக்கமாய் அவள் அணியும் அயர்ன் செய்து வைத்திருந்த செட்களில் மீதியாய் இருந்த ஒரேயொரு பெப்லம் டாப் கூட ஒரு சாஃப்டான பலாஸோ பான்ட்டையும் இழுத்தெடுத்து அணிந்து கொண்ட வர்ணி தன்னுடைய நீளக்கூந்தலை விரலால் கோதிக்கொண்டே ஓடி வர, அவர்களிடம் இருந்த ஒரே ஒரு கண்ணாடியின் முன்னே நின்று கொண்டு கண்ணுக்கு மை தீட்டிக்கொண்டிருந்தாள் பூஜா.
"என்னை எழுப்பி விட்டிருக்கக் கூடாதா எருமை?" அவளை என்று கடித்தபடி அவசர அவசரமாய் தலை வாரினாலும் அவளுடைய கண்கள் பூஜா புதிதாய் வாங்கி வைத்திருந்த டின்டட் சன்ஸ்கிரீனை குறி வைத்திருந்தன.
"விடிய விடிய எவனோ எவனையோ கொலை பண்றதை பார்த்துட்டிருந்துட்டு காலைல என்கிட்ட வராத சொல்லிட்டேன்." என்று கோபமில்லாமல் முறைத்தபடி பூஜா நகர
"நீ மட்டும் உன் ஆள்கிட்ட மிட்நைட் வரை கடலை போடுற... அது சரியா?" என்ற வர்ணி இப்போது அந்த டியூபை எடுத்து கொஞ்சமாய் முகத்தில் தடவிப்பார்த்தாள். பிடித்திருந்தது. யார் எதை வாங்கினாலும் அந்த வீட்டில் எல்லாமே பொதுச் சொத்தே.
"நான் என் ஆள்கிட்ட தானடி கடலை போடறேன்..." என்று அங்கிருந்தே முறைத்தாள் பூஜா
"அப்போ நானும் என் டிவில தானே பார்க்கிறேன்” என்று இவளும் பதிலுக்கு முறைக்க
“உன்கிட்ட மனுஷன் பேசுவானா? பேக்கரி வண்டி வந்திடும் நான் கிளம்புறேன்..நீ இங்கேயே நில்லு" என்றபடி பூஜா வாசலை நோக்கி நடக்கலானாள்
அச்சோ என்று வர்ணியும் அவசரமாய் எல்லாவற்றையும் எடுக்க ஆரம்பித்தாள். அடித்துப் பிடித்துக்கொண்டு இருவரும் ஓடி வர, "மெதுவா மெதுவா உங்க சத்தத்திலேயே நான் இடிஞ்சிருவேன்" என்று பயமுறுத்தியது அந்த பழைய அப்பார்ட்மென்ட் கட்டடம்.
"வர்ணி... பூஜு..." என்ற பெண் குரலில் நடந்து கொண்டிருந்த இருவரும் புன்னகையோடு திரும்ப, "அவல் செஞ்சேன் ரெண்டு பேரும் சாப்பிடுங்க... இவரை வேலைக்கு அனுப்பணும் நின்னு பேச நேரமில்லை" என்றபடி வாம்மா மின்னல் என்பது போல வந்த நித்தியா அக்கா வந்து போன தடமாய் இருவர் கையிலும் அந்த டிபன் பாக்ஸ் மட்டும் தான் மீதமிருந்தது. அவர் அதற்குள் ஜீனியாய் மாயமாயிருந்தார்
‘அப்பாடா இன்றைக்கு அந்த காய்ந்து போன பேஸ்ட்ரியில் இருந்து விடுதலை’ என்று எண்ணிக்கொண்டு இப்போது இரண்டு மடங்கு உற்சாகமாய் ஓடியவர்கள் பார்க்கிங் பக்கமாய் ஓடி வர, அந்தோ பரிதாபம் மண்ணில் உருண்டு கிடந்தது ராக்கி.
அது வர்ணியின் ஸ்கூட்டி தான்.
அந்த ராக்கிக்கு வர்ணியை விடவுமே அதிக வயதிருக்க கூடும்.
"எவன்டா அவன் பேபியை கீழே தள்ளுனது?" என்று வர்ணி பதறிக்கொண்டு போய் வண்டியை நிமிர்த்தி ஸ்டார்ட் செய்து பார்க்க ஒரு வழியாய் ராக்கிக்கு உயிர் வந்து விட்டது.
பூஜா பின்னால் தொற்றிக்கொள்ள வீதி சமிக்ஞைகள் இருந்தும் யாரும் பின்பற்றாத வீதியில் ஒரு வழியாய் ராக்கியை விரட்டி அவர்கள் பரமேஸ்வரி மாலுக்கு வந்து சேர நேரம் ஏழு ஐம்பது.ஹப்பாடா பேக்கரி வண்டி காலை எட்டுக்குத் தான் வரும். ஆசுவாச பெருமூச்சோடு இம்முறை ராக்கி விழுந்தாலும் அடிபடாத இடமாய் பார்த்து நிறுத்தி விட்டு இருவரும் மாலை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள்.
மால் என்று அந்த கட்டடத்தை சொல்வதற்கு கூட கொஞ்சம் கூச்சம் தான். பழைய கடைத்தொகுதி என்று வேண்டுமானால் சொல்லலாம்... ஆங்காங்கே கழன்று விழப்போகிறேன் என்ற நிலையில் கம்பிகளும் வயர்களும் தொங்கும். இளைஞர்களை ஈர்க்க எதுவுமே இருக்காது. ஆக அங்கே வருவதெல்லாம் அருகில் கடை வைத்திருப்பவர்களும் சுற்றுவட்டாரத்தில் பொழுது போகாமல் இருக்கும் முதியவர்களும் தான். எல்லாருக்குமே வருபவர்களில் பெரும்பாலானோரை தெரிந்தே தான் இருக்கும். ஆக மொத்தம் அது ஒரு அரசமரத்தடியின் அப்கிரேடட் வர்ஷன் தான் அந்த பரமேஸ்வரி மால்.
இருவரும் அந்த மாலின் நுழைவாயிலை அடைந்த அந்தக்கணம் வாசலில் வந்து உருண்டது பல வர்ண நூல் பந்து. இருவரும் ஓரடி துள்ளி விலக அவர்களின் கண்கள் சொல்லி வைத்தாற்போல எதிரே இருந்த பூக்கடையைத் தொட்டன. அவர்கள் எதிர்பார்த்ததை போலவே அங்கே ஆக்ரோஷமாய் நின்று கொண்டிருந்தார் சிவபெருமான்.
காமெடிக்கு இல்லைங்க நிஜமாவே அவர் பெயர் சிவபெருமான் தான். அது மட்டுமில்லை அவருக்கு பக்கத்தில் கோபத்தோடு முறைப்பவர் அவர் சக தர்மினி பார்வதி.
"இன்னிக்கு யார் யாரை வெளிநடப்பு பண்றாங்க?" என்று வர்ணியின் காதை கடித்தாள் பூஜா.
"அடுத்த பால் போடட்டும் வெயிட் பண்ணு அப்போ தான் தெரியும்" என்று கண்கள் பளபளக்க வர்ணி சொல்ல, அதற்குள்ளே அங்கே வந்திருந்த இரண்டு முதியவர்களும் இவர்களை கண்டதும் வரவேற்பாய் ஒரு ரகசிய சிரிப்போடு சண்டையையே ஓரக்கண்ணால் பார்த்திருந்தனர்.
"தொழில் பண்ற பொருளை எல்லாம் தூக்கி போடுற? அறிவில்லை? இனிமே நீ எதையும் தொடக்கூடாது. இதெல்லாம் என் அப்பா கொடுத்தது" என்று பார்வதி ஆன்ட்டி சண்டைக்கு நிற்க, "இன்றைய கள நிலைவரப்படி சிவன் தான் வெளியே போவார் போலிருக்கு" என்று வர்ணி பூஜாவின் காதை கடித்த மறுகணம், "சொல்லி காட்டுறேல்ல?... உன் கடையில மனுஷன் இருப்பானா?" என்று முறைத்தபடி வெளிநடப்பு செய்தார் பெருமானார்.
பரமேஸ்வரி மாலின் காலைகள் மின்சாரம் இல்லாமல் ஆரம்பமானாலும் ஆகும், ஆனால் இந்த ஒரு காட்சி இல்லாமல் ஆரம்பமானதே கிடையாது. யார் வெளியே போகிறார் என்பது மட்டும் தான் மாறிக்கொண்டிருக்கும். மற்றபடிக்கு சண்டைகள் எப்போதுமே அந்த பூக்கடையில் மாறிலியே.
வேக வேகமாய் போருக்கு போவபர் போல போனவரை கண்டு பொங்கிய சிரிப்பை வெளிக்காட்டாமல் இருக்க பின்புறமாய் திரும்பிய வர்ணி அவர்களுக்கு பின்னே முறைத்தபடி நின்ற நெடியவனை கண்டு பக்கென்று அதிர்ந்து தான் போனாள்.. இவ்வளவு நேரமும் இவன் இங்கேயா இருக்கிறான்? என்ன ஒட்டுக்கேட்கிறானா என்று பொங்கிய மனது அவன் வழியை குறிப்பாய் பார்க்க அசடு வழிந்து பிறகு கோப முகத்தை பூட்டிக்கொண்டு விடுவிடுவென தங்களுடைய கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
பரமேஸ்வரி மாலின் இடப்பக்கம் முதலாவது கடை, இலக்கம் நூறு, வாசலில் தொங்கும் பூச்சாடிகளில் பசிய கொடிகள் வெவ்வேறு நீளங்களில் தொங்கிக்கொண்டிருக்கும் டார்லிங் கபேயை நீங்கள் முதல் பார்வையிலேயே கண்டுபிடித்து விடுவீர்கள். அது தான் வர்ணியும் பூஜாவும் பங்குதாரர்களாய் நடாத்தும் காபி ஷாப். அங்கே முதலாளிகளும் அவர்களே, தொழிலாளர்களும் அவர்களே..
காலங்கார்த்தால இவன் மூஞ்சில முழிச்சு அசிங்கப்பட்டுட்டேனே என் நாள் விளங்குமா என்று கொதித்தபடி கடையை திறந்து முன்னே இருந்த அரைச்சுவரை சற்று பலத்துடனேயே அடித்து பூட்டியவள் திரும்பி பார்த்தால் அவன் போயே விட்டிருந்தான்.
"என்னை எழுப்பி விட்டிருக்கக் கூடாதா எருமை?" அவளை என்று கடித்தபடி அவசர அவசரமாய் தலை வாரினாலும் அவளுடைய கண்கள் பூஜா புதிதாய் வாங்கி வைத்திருந்த டின்டட் சன்ஸ்கிரீனை குறி வைத்திருந்தன.
"விடிய விடிய எவனோ எவனையோ கொலை பண்றதை பார்த்துட்டிருந்துட்டு காலைல என்கிட்ட வராத சொல்லிட்டேன்." என்று கோபமில்லாமல் முறைத்தபடி பூஜா நகர
"நீ மட்டும் உன் ஆள்கிட்ட மிட்நைட் வரை கடலை போடுற... அது சரியா?" என்ற வர்ணி இப்போது அந்த டியூபை எடுத்து கொஞ்சமாய் முகத்தில் தடவிப்பார்த்தாள். பிடித்திருந்தது. யார் எதை வாங்கினாலும் அந்த வீட்டில் எல்லாமே பொதுச் சொத்தே.
"நான் என் ஆள்கிட்ட தானடி கடலை போடறேன்..." என்று அங்கிருந்தே முறைத்தாள் பூஜா
"அப்போ நானும் என் டிவில தானே பார்க்கிறேன்” என்று இவளும் பதிலுக்கு முறைக்க
“உன்கிட்ட மனுஷன் பேசுவானா? பேக்கரி வண்டி வந்திடும் நான் கிளம்புறேன்..நீ இங்கேயே நில்லு" என்றபடி பூஜா வாசலை நோக்கி நடக்கலானாள்
அச்சோ என்று வர்ணியும் அவசரமாய் எல்லாவற்றையும் எடுக்க ஆரம்பித்தாள். அடித்துப் பிடித்துக்கொண்டு இருவரும் ஓடி வர, "மெதுவா மெதுவா உங்க சத்தத்திலேயே நான் இடிஞ்சிருவேன்" என்று பயமுறுத்தியது அந்த பழைய அப்பார்ட்மென்ட் கட்டடம்.
"வர்ணி... பூஜு..." என்ற பெண் குரலில் நடந்து கொண்டிருந்த இருவரும் புன்னகையோடு திரும்ப, "அவல் செஞ்சேன் ரெண்டு பேரும் சாப்பிடுங்க... இவரை வேலைக்கு அனுப்பணும் நின்னு பேச நேரமில்லை" என்றபடி வாம்மா மின்னல் என்பது போல வந்த நித்தியா அக்கா வந்து போன தடமாய் இருவர் கையிலும் அந்த டிபன் பாக்ஸ் மட்டும் தான் மீதமிருந்தது. அவர் அதற்குள் ஜீனியாய் மாயமாயிருந்தார்
‘அப்பாடா இன்றைக்கு அந்த காய்ந்து போன பேஸ்ட்ரியில் இருந்து விடுதலை’ என்று எண்ணிக்கொண்டு இப்போது இரண்டு மடங்கு உற்சாகமாய் ஓடியவர்கள் பார்க்கிங் பக்கமாய் ஓடி வர, அந்தோ பரிதாபம் மண்ணில் உருண்டு கிடந்தது ராக்கி.
அது வர்ணியின் ஸ்கூட்டி தான்.
அந்த ராக்கிக்கு வர்ணியை விடவுமே அதிக வயதிருக்க கூடும்.
"எவன்டா அவன் பேபியை கீழே தள்ளுனது?" என்று வர்ணி பதறிக்கொண்டு போய் வண்டியை நிமிர்த்தி ஸ்டார்ட் செய்து பார்க்க ஒரு வழியாய் ராக்கிக்கு உயிர் வந்து விட்டது.
பூஜா பின்னால் தொற்றிக்கொள்ள வீதி சமிக்ஞைகள் இருந்தும் யாரும் பின்பற்றாத வீதியில் ஒரு வழியாய் ராக்கியை விரட்டி அவர்கள் பரமேஸ்வரி மாலுக்கு வந்து சேர நேரம் ஏழு ஐம்பது.ஹப்பாடா பேக்கரி வண்டி காலை எட்டுக்குத் தான் வரும். ஆசுவாச பெருமூச்சோடு இம்முறை ராக்கி விழுந்தாலும் அடிபடாத இடமாய் பார்த்து நிறுத்தி விட்டு இருவரும் மாலை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள்.
மால் என்று அந்த கட்டடத்தை சொல்வதற்கு கூட கொஞ்சம் கூச்சம் தான். பழைய கடைத்தொகுதி என்று வேண்டுமானால் சொல்லலாம்... ஆங்காங்கே கழன்று விழப்போகிறேன் என்ற நிலையில் கம்பிகளும் வயர்களும் தொங்கும். இளைஞர்களை ஈர்க்க எதுவுமே இருக்காது. ஆக அங்கே வருவதெல்லாம் அருகில் கடை வைத்திருப்பவர்களும் சுற்றுவட்டாரத்தில் பொழுது போகாமல் இருக்கும் முதியவர்களும் தான். எல்லாருக்குமே வருபவர்களில் பெரும்பாலானோரை தெரிந்தே தான் இருக்கும். ஆக மொத்தம் அது ஒரு அரசமரத்தடியின் அப்கிரேடட் வர்ஷன் தான் அந்த பரமேஸ்வரி மால்.
இருவரும் அந்த மாலின் நுழைவாயிலை அடைந்த அந்தக்கணம் வாசலில் வந்து உருண்டது பல வர்ண நூல் பந்து. இருவரும் ஓரடி துள்ளி விலக அவர்களின் கண்கள் சொல்லி வைத்தாற்போல எதிரே இருந்த பூக்கடையைத் தொட்டன. அவர்கள் எதிர்பார்த்ததை போலவே அங்கே ஆக்ரோஷமாய் நின்று கொண்டிருந்தார் சிவபெருமான்.
காமெடிக்கு இல்லைங்க நிஜமாவே அவர் பெயர் சிவபெருமான் தான். அது மட்டுமில்லை அவருக்கு பக்கத்தில் கோபத்தோடு முறைப்பவர் அவர் சக தர்மினி பார்வதி.
"இன்னிக்கு யார் யாரை வெளிநடப்பு பண்றாங்க?" என்று வர்ணியின் காதை கடித்தாள் பூஜா.
"அடுத்த பால் போடட்டும் வெயிட் பண்ணு அப்போ தான் தெரியும்" என்று கண்கள் பளபளக்க வர்ணி சொல்ல, அதற்குள்ளே அங்கே வந்திருந்த இரண்டு முதியவர்களும் இவர்களை கண்டதும் வரவேற்பாய் ஒரு ரகசிய சிரிப்போடு சண்டையையே ஓரக்கண்ணால் பார்த்திருந்தனர்.
"தொழில் பண்ற பொருளை எல்லாம் தூக்கி போடுற? அறிவில்லை? இனிமே நீ எதையும் தொடக்கூடாது. இதெல்லாம் என் அப்பா கொடுத்தது" என்று பார்வதி ஆன்ட்டி சண்டைக்கு நிற்க, "இன்றைய கள நிலைவரப்படி சிவன் தான் வெளியே போவார் போலிருக்கு" என்று வர்ணி பூஜாவின் காதை கடித்த மறுகணம், "சொல்லி காட்டுறேல்ல?... உன் கடையில மனுஷன் இருப்பானா?" என்று முறைத்தபடி வெளிநடப்பு செய்தார் பெருமானார்.
பரமேஸ்வரி மாலின் காலைகள் மின்சாரம் இல்லாமல் ஆரம்பமானாலும் ஆகும், ஆனால் இந்த ஒரு காட்சி இல்லாமல் ஆரம்பமானதே கிடையாது. யார் வெளியே போகிறார் என்பது மட்டும் தான் மாறிக்கொண்டிருக்கும். மற்றபடிக்கு சண்டைகள் எப்போதுமே அந்த பூக்கடையில் மாறிலியே.
வேக வேகமாய் போருக்கு போவபர் போல போனவரை கண்டு பொங்கிய சிரிப்பை வெளிக்காட்டாமல் இருக்க பின்புறமாய் திரும்பிய வர்ணி அவர்களுக்கு பின்னே முறைத்தபடி நின்ற நெடியவனை கண்டு பக்கென்று அதிர்ந்து தான் போனாள்.. இவ்வளவு நேரமும் இவன் இங்கேயா இருக்கிறான்? என்ன ஒட்டுக்கேட்கிறானா என்று பொங்கிய மனது அவன் வழியை குறிப்பாய் பார்க்க அசடு வழிந்து பிறகு கோப முகத்தை பூட்டிக்கொண்டு விடுவிடுவென தங்களுடைய கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
பரமேஸ்வரி மாலின் இடப்பக்கம் முதலாவது கடை, இலக்கம் நூறு, வாசலில் தொங்கும் பூச்சாடிகளில் பசிய கொடிகள் வெவ்வேறு நீளங்களில் தொங்கிக்கொண்டிருக்கும் டார்லிங் கபேயை நீங்கள் முதல் பார்வையிலேயே கண்டுபிடித்து விடுவீர்கள். அது தான் வர்ணியும் பூஜாவும் பங்குதாரர்களாய் நடாத்தும் காபி ஷாப். அங்கே முதலாளிகளும் அவர்களே, தொழிலாளர்களும் அவர்களே..
காலங்கார்த்தால இவன் மூஞ்சில முழிச்சு அசிங்கப்பட்டுட்டேனே என் நாள் விளங்குமா என்று கொதித்தபடி கடையை திறந்து முன்னே இருந்த அரைச்சுவரை சற்று பலத்துடனேயே அடித்து பூட்டியவள் திரும்பி பார்த்தால் அவன் போயே விட்டிருந்தான்.
Author: Ush
Article Title: லக்கி வீடு - 1
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: லக்கி வீடு - 1
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.